செஞ்சி K.S. மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

    கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) என்ற இயற்பெயர் கொண்ட இவர், செஞ்சி கே. எஸ். மஸ்தான் என்ற பரவலாக அறியப்படும் தமிழக அரசியல்வாதியும், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும் ஆவார். திமுக கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.                           31 மே 1955-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியில், இவரது தந்தையான காஜா பாஷா என்பவருக்கும், தாயான ஜூலேகா பீ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர், செஞ்சி அரசு  மேல்நிலைப்பள்ளியில், 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார்

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.  இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

கட்சி பொறுப்புகள் & அரசு பதவிகள்

1976
அரசியல் பயணம் துவக்கம்.
1978
செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
1980
பொதுக்குழு உறுப்பினர்.
1986
செஞ்சி பேரூராட்சி தலைவர்

1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவர்.

1989
செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
1992
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
1996
மாநில செயற்குழு உறுப்பினர்
2014
கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
2014
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
2016
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

  2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

2021
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்

2021
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இந்த அமைச்சகத்தின் கீழ், சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு வாரியம் போன்றவை ஆளுமையாகிறது

உங்கள் குறைகள் & கோரிக்கைகள் தெரிவிக்க
முகவரி

59, தளபதி இல்லம், தேசூர் பாட்டை, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 604202

தொலைபேசி

+91 9791627070

இமெயில்

gingeemasthan31@gmail.com

வாட்சப் எண்

+91 9791627070

கோரிக்கைகளை பின்வரும் மின்னணு படிவத்தில் தெரிவிக்கலாம்